Tuesday, April 27, 2010

பறவை

தீண்டல்கள் நேராத பெண்ணின் தேகம் போல் மென்மையான சதை. குட்டி பிள்ளைகள் நெற்றியில் பொட்டு என்ற பெயரில் வைக்கிற சின்ன புள்ளியை போன்ற கண்கள். கண்ணிர் துளிகளுக்கு வார்த்தைகளாக மாறும் வல்லமை உண்டு என்று அன்று தான் அறிந்திருந்தது அது. கழிவரைகளுக்கும் கைகுட்டைகளுக்கும் மட்டும் பரிச்சியமான கண்ணிர் துளிகளை வார்த்தைகளாகவும் உதிர்க்க முடியம் என்று அன்று தான் அதற்க்கு தெரிந்திருந்தது. அந்த பறவைக்கு அன்று ஒரு காதல் கடிதம் எழுதவேண்டும் என்று ஆசையாக இருந்தது . இந்த காதலை பார்ப்பவர்களும் கேட்பவர்களும் சிரிக்கலாம், முரைக்கலாம், ஏன் காரி கூட துப்பலாம் அப்படியொரு காதல் அந்த பறவைக்கு அந்த மரத்தின் மீது!!

பறத்தல் என்பது இயற்கையான நிகழ்வு. அது நிகழாவிட்டால் அதற்க்கு பறக்கவும் தெரியாது மற்ற பறவைகளை போல் பாடவும் தெரியாது ஆடவும் தெரியாது. என்றோ எப்படியோ நிகழ்ந்தது. கனமாக இருந்ததால் லேசாக அசைத்து பார்க்கலாம் என்று சிறகினை அசைத்ததில் இன்று அந்த மரத்தின் கிளையில் அமர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க பறவைகளின் பட்டியலில்இடமும் பெற்று இருந்தது. முதலில் எல்லாம் சாதாரணமாக தான் இருந்தது. காற்றில் இலை அசைவதும். மரத்தின் கிளைகள் இதற்க்கு இடம் கொடுத்தும். சில நாட்களுக்குள் இலையின் தீண்டலும் கிளையின் ஸ்பரிசமும் இயற்கையாக தெரிந்தது. பின்பு சுகமாக கடிதம் எழுத நினைத்த பொழுது சுமையாக.


அந்த மரம் வளர நீர் பாய்ச்சியவர்கள் யாரும் இன்று உயிரோடு இல்லை. ஒரு சிலரை தவிர. வேர்கள் படர்த்தி கிளைகள் உயர்த்தி திமிர்ந்து நிற்கும் மரம். மரங்களில் கொழிக்கும் வளத்தினை மறைத்து வைக்க எந்த அந்தரங்க பாகங்களையும் இறைவன் வைக்கவில்லை. அதை மறைக்கும் எண்ணமும் மரங்களுக்கு இருப்பதில்லை. எத்தனையோ பறவைகளுக்கு அடைக்கலம் தந்த மரம். இந்த பறவைக்கு நிழல் கொடுத்ததில் ஆச்சிரியம் என்ன? ஆனால் தன்னில் வந்த அமர்ந்த எத்தனையோ பறவைகளின் இந்த பறவை மட்டும் சுமையாக இருந்திருக்க வேண்டும் அந்த மரத்திற்கு. சற்று கவனத்தோடு தான் தங்கி பிடித்து இருந்தது . பறவையின் கனத்திற்கு நிச்சயம் அதன் உடல் கரணம் அல்ல என்று மட்டும் அந்த மரத்திற்கு தெரியும். (எத்தனை பறவைகளை பார்த்திருக்கும் ).

அந்த பறவையின் சிறகுகள் துளிர்க்கையில் அடைக்கலம் தந்த மரம். அந்த பறவையின் திசைகளுக்கும் எல்லாம் வழிவிட்டு நகர்ந்துகொண்ட பெருந்தன்மையான மரம். இரைத்தேடி பறந்ததில் சோர்ந்திருந்த போது சுடும் சூரியனை காட்டி அவன் குளிர் தருவான் அவனை நோக்கி செல் என்று பாதை வகுத்து கொடுத்த போதி மரமும் இதுவே. பசித்த போது கனிகளை கொடுப்பது மரத்தின் பண்பு. கிளைகள் நீண்டிருந்தால் மற்ற பறவைகளும் வந்து அமர்வது அவற்றின் இயல்பு. இதில் என்ன தான் இந்த பறவைக்கு மட்டும் கோபமோ?? பொறமையோ?? இல்லை அதன் மொழியில் காதலோ??? அடைகலம் வந்த இடத்தில் மரத்தை உரிமை கொண்டாட நினைப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பதையும் அந்த பறவை உணர்ந்திருந்தது.

யார் தான் பொறுப்பு இந்த பொல்லாத காதலுக்கு. பறவைக்கு பறவையின் மீது காதல் வரலாம். அது என்ன மரத்தின் மீது. மரங்களில் கிளைகள் என்றால் நீண்டு தான் இருக்கும். அதை போய் ஏதோ தன்னை அழைபதற்காக தான் கரம் நீட்டி விரல் நெருடி நகம் இளைத்து அழைப்பதாக எண்ணி கொள்வதெல்லாம் முட்டாள்தனம். பறவைக்கு காதல் வந்தாலும் சரி கழுதைக்கு கத்திரிக்காய் வந்தாலும் சரி. அந்த பறவைக்கான இடம் அதற்காக மட்டுமே என்பதில் அந்த மரம் உறுதியாக இருந்தது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத செயல்களை நினைப்பதும் ஏங்குவதும் அதையே சாதகமாக்கி வெற்றி காண்பதும் பெண்தன்மை வாய்ந்த எல்லா உயிரினகளுக்கும் பொருந்தும். வேடந்தங்களுக்கு இந்த மரத்தை அழைத்து சென்று இது என் காதலன் என்று அந்த பறவையால் இந்த மரத்தை அறிமுகம் செய்ய முடியுமா? கம்பிரத்தின் பிரதிநிதிகள் மரங்கள். அதை தன்னை போல் பறக்க வேண்டும் என்று நினைப்பது தான் சாத்தியமாகுமா?


அன்று நல்ல மழை. அந்த மரத்தின் தண்டுகள் பழமையடைந்ததற்கான சுவடுகளே இல்லை. . அன்று அந்த மரத்தில் எந்த பறவைகளும் இல்லை. உயர்ந்து சிலிர்த்த மரத்தில் அந்த பறவை மட்டும் தனிமையில் இருந்தது அதற்க்கு பரவசம் அளிப்பதாய் இருந்தது. அந்த பறவை தனக்காக அந்த மரத்தில் ஏற்படுத்தி இருந்த பொந்தில் தன் இரு கால்களை குறுக்கி கதகதப்பை உணர்ந்திருந்தது. தனக்காக மட்டுமே ஆண்டவன் இந்த மரத்தை படைத்திருப்பதாக உணர்ந்தது. சில மணி துளிகளில் அந்த பறவையின் காதுகளுக்கு, சிதறும் மழைத்துளியின் நடுவே உடல் சிலாகிக்கிற அதன் மெலிய சிறகுகள் சில்லென்று சிலிர்க்கிற ஒரு வித்தியாசமான செல்ல ஒலி. தன் காதலனோடு தங்கிருந்த தனிமையை உடைத்தெறிந்து அது என்ன ஒலி என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் அந்த பறவைக்கு. அந்த ஒலியையின் பிறப்பிடத்தை தேட ஆயத்தம் ஆகியது. அந்த மரம் தனக்கு சொந்தம் என்ற மாயை ஒரு கனம் தளர்த்தியது. கண்களை கதகதப்பில் வைத்து கொண்டு பார்வையின் நீளத்தை மட்டும் நீட்டி பார்த்தது. தட தட வென்று பொழிகிற மழையின் இடையே... மழைக்கு ஒதுங்கிய ஒரு இளம் தாயின் மார்புகள் மூலமாய் அவள் குழந்தைக்கு அந்த ஒலி சுரந்து கொண்டு இருந்தது. இப்பொழுது அந்த பறவையும் நனைய துவங்கி இருந்தது. மரத்தின் வெளியே பெய்த மழையிலும் தனக்கு மட்டுமே சொந்தமான அதன் கண்ணீரிலும். அதற்க்கு காதல் கடிதம் ஒன்று எழுத வேண்டும் என்று ஆசையாக இருந்தது!!!!!!!

No comments:

Post a Comment