அந்த மரங்களக்குள்

கொளுத்து எரியும்,
தீ பந்தத்தின் நிழல்
கவிழ்ந்திருந்தது.
நிழலின் திடமான வீச்சில்
இரண்டு
மரங்களும் சரிந்தே
விட்டன!
வீழ்ந்த மரங்கள்
விதைகளை
மண்ணில் விதைக்காமல்
நிலத்தில் உலர்தியிருந்தன.
நிழல் ஓய்ந்திருந்தது.
இப்பொழுது
நல்ல மழை .
அதில் ஒரு
மரத்தின் கிளை
மட்டும் சுளிரென
அள்ளி தெறித்தது
மகரந்த பூச்சை!
வெண்க்கடல்
கானம் மீட்டி
அடர்ந்து தடித்திருந்த
திடமான கரும்மிருட்டு.
என்னை அழைத்த அந்த
ஊதா நிற பறவைக்கு
நான் ஒரு கதை சொன்னேன்!
விந்தையான இயற்க்கை
ஊர் வெளியில் பாய் விரித்த இயற்கை
செங்கடலாக
கருங்கடலாக
நீலக்கடலாக
ஊர் எல்லையில் மட்டும்
வெண்க்கடலாக"
தொலைநோக்கு

அடுத்த சில மணிநேரங்கலில்
மழை வருவதற்க்கான
அறிகுறிகள் உண்டென்று
சொன்னாய்...
அருகில்
கொழுத்து கருத்து
இருந்த முகிலை
அறியாமலேயே!!
No comments:
Post a Comment