முத்து மணி மாளிகையில்
கோபியர்கள் தேடுகையில்
குலவிடுவான்
என் கண்ணன்!
மோகனம் தெளிந்து
விழிமயிர் அவிழ்கையில்
சொப்பனம் என சொல்லி
சிரித்திடுவான்
என் கண்ணன்!
மார்கழியின் ஈரத்தை
விழியில் பரப்பி
கூதல்முன் முகில்நிறத்தை
தேகமெங்கும் நிரப்பி
கண்நிறைக்கும்
ஆழி என் கண்ணன்!
திரண்டு பொங்கும்
இளமதி முகங்கொண்டு
வளர்பிறை பொருந்திய
புன்னகை நெய்து
ஊனிக்க என்னுள்
உலவிடுவான் கண்ணன்!
ஆயர்பாடியில் ஆடித்திருந்தவன்
ஆகாயத்தில் பறந்துவிட்டான்.
மழைக்கு பின் சிதறியுடையும்
நீர் குழிழ் போலே
இந்த பேதையின் கனவையும்
உடைத்துவிட்டான்.
யமுனை கரையோரம்
யாழ்மீட்டி திரிகையில்
பரிசொன்று
தருவதாய் சொல்லி
சென்றான்.
யாட்கையை தொலைத்துவிட்டு
யாசகம் கேட்கையில்
பதிலை வேங்குழல்
துளையினில் புதைத்து
நின்றான்.
அவன் மீட்டிய
கானங்கள் - காயங்கள் ஆனதும்
உச்சி மயில்பீலி எடுத்து
அசைந்து வந்தான் -
கனிந்த வடுக்களில் குருதி
சொரிகையில் - மெல்ல
மெல்ல வருடித் தந்தான்.
என் விழிகளை கடக்கும்'
ஏக்க அலைகள்
கண்ணன் கால்களை
நனைத்தே கரை
திரும்பும்.
ராதையின் ரணங்களினி
ஆறுவதில்லை.
இருந்தும்
மதுசூதனன் மலர்முகம்
கண்டால் இமையடங்கும்.