Thursday, May 6, 2010

கவிதைகள் - 2



மயிலிறகு

இயற்கையின் முரண்.

மழை காலத்தில்
தோகை விரித்தது

பெண் மயில்...


மயிலிறகின்
ஒவ்வொரு கீற்றிலும்

துளித் துளியாய்
சொட்டி கொண்டிருந்தது
அதன் காதல்!!!






பயணங்கள்


உன்னுடன் சினுங்கி
சுர
க்கும் அலைபேசியின்
ஒலியாய்....

உன்னுள்ளீரம் பரப்ப..
குடுவையில்
அடைப்பட்டிருக்கும்

மேகமாய்...


என் காதலின்

உயரம் நீ...

உன் அடையாளத்தை

சுருக்கிய

நீல அட்டையாய்...


உன்னுடன்
ஒட்டிகொண்டும்.

உய்த்துகொண்டும்

திரிகிறேன்

உன்னுடன் வர முடியாத
பயணங்களில்....!!!!




பனித்துளி

இன்று என் தோட்டத்து
அரளி செடியின்

பச்சயத்தை

மறைத்திருந்தது...


அதன் மீது
படர்ந்திருந்த

பனிதுளிகள்...










பொம்மை


சில மணித்துளி
பயணங்களில்

சர்கார் இடம்
என் இடம்
ஆகிப்போனது.


அடுத்த நொடி

கைமாறும்
கரென்சி காகிதங்கள்

இந்த நொடி

எந்தன் ஆஸ்தியாக

தெரிந்தது..


இன்று
மகளாக இருக்கும்

நான்

நாளை அம்மாவாகவும்
ஆக கூடும்.


வேறொரு வனத்தின்
உச்சந்தலையில்
உருவான மேகம்
காற்றின் அசைவில்

இன்று என் வாசலை
நனைத்ததில்

ஆச்சரியமும் இல்லை.


எத்தனை
முன் எச்சரிக்கைகள்.


இருந்தும்
பால் மணம் மாறாப்
பிள்ளை போல்
எனக்கு சொந்தமே
இல்லாத பொம்மையை
என் அக்குளில் தூக்கிச்
சுமக்கிறேன்
என்று பறிக்கப்படுமோ
என்ற அச்சத்தோடு...

3 comments:

  1. ஹல்லோ... வளரும் எளுத்தாலரே :)))

    ReplyDelete
  2. @selva: வருக!! வருக!! வளரும் தொகுப்பாளாரே!!

    ReplyDelete
  3. Great to see various aspects in your writeups.You can access my blog at http://thanmathi-payanam.blogspot.com..Thanks to Shakthi,she is the one who introduced your blog to me.......-Thanmathi

    ReplyDelete