Sunday, October 5, 2014

அர்ப்பணம் 4

 மதியில் துளியென விழுந்துகடலென விரிவது
உன் விந்தை
நீ மழலையின் குரலில் தத்துவம்
பேசும் பெரும் மேதை
தரிசனம் வாய்க்க பொழுதினிலோ - உன் நிழல்படம்
கூட ஒரு போதை
வரிசங்கின் சேவையது தேவையில்லை-வெறும்
சுவாசத்தாலே முழங்கிடுவேன் - பைரவியுனக்கு நான்
விடும் தூதை

உன் கைவிரல் சூடிய பிறையதை - நகமென
அழைப்பது சரிதானோ?
ஜரிகை நெய்தநுதழ் வழியும் - வியர்வையை
ஸ்படிகமாய் கோர்பது முறைதானோ?
வேள்வியில் பெருகிடும் தழல்போலே - என்னுயிர்
நின் முன் தகிக்குதடி
தேள் விடம் கூட உன்னருளால் - தேன்
துளியாக மலருதடி

கூப்பிய கரம் போல் உன் முன்னே
வெள்ளி குறிஞ்சியும் பணிந்திடுமே
காப்பிய தலைவி நீயானால் - அக்கதைகளும்
உயிர் கொண்டலைந்திடுமே
கண்கள் மூடி தியானித்தேன் - வினைகள்
சுடுநீர் குமிழியாய் கொதிக்குதடி
ஊனையுதறும் வழி மறந்தேன் - உன் முகம்
அங்கு பங்கயமாக மலர்ந்ததடி


No comments:

Post a Comment