Tuesday, December 4, 2012

பாஷை

பாஷை

வேண்டாம் என்று புரியும் வார்த்தையில் சொல்லி
வேண்டும் என்பதை புரியாத பாஷையில் சொல்லும்
இந்த விசித்திரமான பாஷையை
புரிந்து கொள்ள முயன்றிருந்தால் கூட
நாம் சிநேகிதர்களாகியிருப்போம்.
*****
 
இன்று

இன்றைய நாளை இலக்காக வைத்து
நகர்ந்த என் நாள்காட்டி.
இன்றைய பொழுதில்
இலக்கை அடைந்தபின்
நீர் கப்பிய கண்களில்,
ஈரம் உலர்ந்தபடியே
வெரித்தது பார்த்தது
எந்த அறிவிப்பும் இன்றி
காலம் நட்டு வைத்துவிட்ட மற்றொரு இலக்கை.
******






No comments:

Post a Comment